Monday 18 October 2010

ஆட்டோ இல்லையேல்....

அடுத்த நாள் சோற்றுக்கு ஆன வழி தேடயிலே
அழுகின்றாள் பிள்ளை.. அப்பா.. ஐஸ் கிறீம்
அரவணைத்து அவளைத் தேற்றி அடக்கையிலே
அலறி அடிக்கிறது தொலைபேசி
அதை எடுத்துக் காதில் பொருத்துகையில்
அண்ணை குறை நினையாத...
அண்டைக்கு வாங்கின காச-எதையும்
அடகு வைச்செண்டாலும் தா...
அழுங்குப் பிடியைப் பேசி தளர்த்துகையில்
அடிக்கின்றான் தபால் காரன் சைக்கிள் மணி
அவசர எச்சரிக்கைக் கடிதம்
அடகு நகை மீட்க வங்கியிலிருந்து
அலுத்துப் போய் கடிதத்தை விட்டெறிந்தேன்
அடுத்து வரும் ஆட்டோ லீசிங் கடிதம்
ஆட்டோவும் இல்லையென்றால்-என் குடும்ப
போட்டோவுக்கு பூ மாலைதான்

1 comment:

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!